வெள்ளி, 22 அக்டோபர், 2010

காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என்று நான்

பார்த்திருந்த நம் வீட்டு

விழாக்கள் எத்தனை...

வரவில்லை என்று தெரிந்தும்,

காத்திருந்த கணங்கள் எத்தனை...

ஏன் வரவில்லை என்று,

நான் கேட்கும்போது

நீ தரும் ஒரே பதில் "புன்னகை"

அதை பார்த்த பின்பு

எங்கே சென்றது என்

கோபக்கனல் என்று தேடிய

நாட்கள் எத்தனை... எத்தனை...

சீக்கிரம் வந்து விடு

நான் கண்களில் கனவுகளை

சுமந்து கொண்டு காத்திருக்கிறேன்

கணவனாகும் போது

புகுந்த வீட்டு "சீதனமாக" பரிசளிக்க..!!

கருத்துகள் இல்லை: