வெள்ளி, 22 அக்டோபர், 2010

வெட்கம்

வெட்கம்

அவளின்
தாய் வீட்டு சீதனமாம்
அவளின் முகம்
கானுமுன்னம்
நான் கண்டது
அவளின்
நாணம்
எப்படியேனும்
கண்டுவிட
துடிக்கும்
மனதுக்கு
ஆறுதல் சொல்கிறேன்
கேட்பேனா என்று
சூளுரைக்கிறது
தவிக்கும்
மனதை
கட்டுபடுத்தி
மாலையில்
திருவிழாவில்
காணலாமென்று
ஆற்றுபடுத்திவிட்டு
காத்திருக்கும்
வேளையில்
மாலையும்
என்னை திக்கி திணறி
வந்து சேர்ந்தது
கோவிலில்
தேரை இளுத்தவர்களை
கேட்க தோன்றியது
அம்மன் நடந்து வர
சிலையை மட்டும்
சுமந்து
வருவது நியாயமா
என்று...

கருத்துகள் இல்லை: