வெள்ளி, 22 அக்டோபர், 2010

வழியனுப்ப வந்துவிடு...

பெற்றவளையும் வெறுக்க முடிந்தது

காதலின் கடிவாளம் கண்ணை

மறைத்து காற்றை கால்களில்

கட்டிக்கொண்டு பறந்தது மனது...

அவளை மணமுடிக்க

பேசச்சொல்லி விரட்டியது..

மடமனதுக்கு தெரியவில்லை

மாறிடுவாள் மங்கையென்று

அவளின் மாறுதலால், ஆறுதலின்றி

தவிக்கிறேன் தோல்விகளின்

உச்சத்தில் சாவை எதிர்கொள்ள,

துணிவில்லை தினம் சாகிறேன்

ஆற்றுவாரின்றி எல்லோரும் தூற்ற...!!

வழியனுப்பவாவது வரசொல்லுங்கள்

அந்த மகராசியை...!!!

2 கருத்துகள்:

NithyA சொன்னது…

You feel very much to provide this kavithai. Its' super.

NithyA சொன்னது…

You feel from heart to express your love fail.